கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் கூரைக்கு மேலாக சிறைச்சாலைக்குள் எறியப்பட்ட பொதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பொதி மேலதிக விசாரணைகளுக்காக பொரளை காவற்துறையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அந்த பொதியில் இருந்து இரண்டு கையடக்க தொலைபேசிகள், மின்னேற்றி, சிம் அட்டைகள், கையடக்க தொலைபேசி மின்கலம், ஐஸ் ரக போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் சிறிய ரக பைக்கட் மற்றும் கஞ்சா என கருதப்படும் சிறிய ரக பொதி, 10 புகையிலை என்பன மீட்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலையில் சேவையாற்றும் அதிகாரி ஒருவரினால் இந்த பொருட்களுடனான பொதி மீட்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.